எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

லகான்களும் கொடுக்குகளும்,

லகான்களும் சேணங்களும்
அவசியமாயிருந்தன
டாக்குக் டாக்கென்று நடக்கும்
குதிரையாயிருந்தபோது.

 

 எரவாணத்தின் இருட்டில்
ஒளிந்திருக்கும் தேள்
அவ்வப்போது வாய்வழியேயும்
பிறப்பெடுக்கும்
துரத்துமொன்றைக் கொட்ட.


 கார்டூன் குதிரைகளுக்கும்
தேள்களுக்கும்
நினைக்குந் திசையெல்லாம்
வால்களும் கொடுக்குகளும்
முளைக்கின்றன
அவைகளின் விருப்பமில்லாமலேயே.


1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...