எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 14 நவம்பர், 2021

வளியும் ஒளியும்

சூரியனாய் அமர்ந்திருக்கிறாய்
உன் பக்கமிருக்கும் நிலவும்
சுற்றிலும் கிடக்கும் தாரகைகளும்
மறைந்து விடுகிறார்கள்.
யாருமறியாமல்
காந்தக் கண்களால்
என்னைக் கவ்வி எடுத்து
ஒளிப் பறவையாய்ப் பறக்கிறாய்
உன் பிரகாசத்தில்
தோய்ந்த என் விழிகளும்
இரட்டைச் சூரியனாய்
ஒளிரத் துவங்குகின்றன.
அன்பின் கதகதப்பும்
கனிவின் வெம்மையும் சூழ
எங்குமே இருளற்ற
இன்னொரு பிரபஞ்சத்தில்
எனைக் கொண்டு சேர்க்கிறாய்.
வளியும் ஒளியுமாய்
அலகுகள் கோதி
வண்ணச் சிதறல்களோடு
வாழத் துவங்குகிறோம்.
 
Related Posts Plugin for WordPress, Blogger...