சிதறும் அலைகளுக்குள்
கைபிடித்துச் செல்ல உன்னால் முடியும்
நனையும் அச்சமின்றிக்
காற்றைப் போல் வருகிறேன்
வெள்ளித் துகள்களாய் நம்மை
வரைந்து கொண்டிருக்கிறது சூரியன்
கால தேச வர்த்தமானம் இன்றிக்
கரைந்து ஓடுகிறோம் கரைகள் எங்கும்
பாதங்களின் கீழ் நெகிழ்ந்து நெகிழ்ந்து
கடலுள் தன்னை மறைத்துக் கொள்கிறது மணல்.