சுற்றுகிறது உன் நினைவு..
என்னை இனிப்பாக்கி..
குழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..
கார்மேகம்
கார்மேகம் வந்தது
கனத்த மழை பெய்யுது.
நீர்நூலைச் சேர்த்து சேர்த்து
அருவி நெசவு செய்யுது.
ஓடைத்துண்டாய் விழுகுது
நதிச்சேலையாய் நெளியுது.
அனைத்தும் ஓடி ஓடிவந்து
நீலக்கடலில் கலக்குது.
நீர்மேல் சூரியன்
உலவுது
கதிரில் வெப்பம் பரவுது
.
ஆவியாகி நீர் எழும்புது
மேலே கொஞ்சம் செல்லுது
கருத்த யானை உருக்கொண்டு
கார்மேகம் ஆகுது
மீண்டும் மழை பெய்யுது
இதுவே இயற்கை சுழற்சியாம்
இனிய எளிய தலைவர்கள்
காந்தித் தாத்தா வந்தாரு
சத்திய வழியில் நடந்தாரு.
நேரு மாமா வந்தாரு
நல்லாட்சியைத் தந்தாரு .
அண்ணல் அம்பேத்கர் வந்தாரு
சட்டம் ஒழுங்கு செய்தாரு.
கர்மவீரர் வந்தாரு
கல்வியோடு சத்துணவு தந்தாரு.
இனிய எளிய தலைவர்கள்
நாட்டை உயர்த்திச் சென்றார்கள்.
சுதந்திரத்தைத் தந்தார்கள்
சுகமாய் வாழச் செய்தார்கள்.
மக்கள் மனதில்
நிறைந்தார்கள்
மகத்துவமான
மனிததெய்வங்கள்.
இவரை நாமும் போற்றுவோம்
இவரை பின்பற்றி வாழுவோம்.