எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 நவம்பர், 2013

மீன் தீபம்.



தீபங்கள் அசைவதாய்

மீன்கள் நீந்தும் தொட்டி

ஒளியேற்றுகிறது
உயிர்ப்பற்ற வீட்டை

வெள்ளி, 22 நவம்பர், 2013

அசைவு



அசைவற்ற காற்றும்

அசையாத மணியும்

ஒளித்து வைத்திருக்கின்றன

சத்தத்தை.

வெள்ளி, 15 நவம்பர், 2013

தொடர்பு



உலகத் தொடர்பற்று

ஓய்ந்து கிடக்கிறது

என்னைப் போலவே

என் கணினியும்.

வியாழன், 14 நவம்பர், 2013

ஈசல் வாழ்வு.

ஈசல் உதிர்க்கும் சிறகுகள்
சொல்லிச் செல்கின்றன
பறக்கும் காலத்தை.

ஒருநாள் வாழ்வென்றாலும்
பறத்தலை நிறுத்துவதில்லை
ஈசல்கள்.

வண்ணத்திப் பூச்சிகளுக்கும்,
மின்மினிகளுக்கும் குறைவானதல்ல
ஈசலின் வாழ்வு.

ஒரு பூ மலர்ந்துதிர்வதாய்
எந்த துக்கமுமில்லாமல் சிறகுதிர்த்து
பறந்து சென்று விடுகின்றன அவை.

கரும் சாம்பல் மேகங்களாய்க்
கடந்து கொண்டிருக்கிறது
ஈசலின் இருப்பு.

சனி, 9 நவம்பர், 2013

தொடர் ஓட்டம்.



தடை ஓட்டத்தில்

வெற்றி பெற்றாலும்

தொடர் ஓட்டம்தான்.

சனி, 2 நவம்பர், 2013

கால்களற்ற காலங்கள்.



கால்களற்ற காலங்கள்

கடத்திப் போகின்றன.

கைபிடித்துச் சென்ற யுவதியைக்

கிழவியாக்கித் தொலைக்கின்றன.

நுரைப்புன்னகையோடு

அடித்துச் செல்லப்பட்டவள்

கண்ணோரம் கீறும்

காக்கைக் கோடுகளால் சிரிக்கிறாள்.

Related Posts Plugin for WordPress, Blogger...