எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 2 ஜூன், 2024

ஒளிக்கீற்று

பாதையெங்கும் வெளிச்சம்
கூசும் கண்களோடு பயணிக்கிறேன்.

கொஞ்சம் ஓய்வெடுக்கக் கூட
இருட்டை விரும்புவதில்லை.

வெளிச்சத்தை விட இருளென்றால் 
அதி பயமெனக்கு.

வசப்படா கண்கள் தூக்கத்தில் ஆழும் போதெல்லாம்
கடவுளுக்கு அத்யந்த நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இந்த இருள் தற்காலிகம்
ஆழ்ந்த நித்திரை ஆட்கொள்ளும் கட்டாயம்

அப்போதும் நம்பிக்கையுண்டு
வழிகாட்டியபடி ஒரு ஒளிக்கீற்று முன்செல்லுமென.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...