அய்யன்
வள்ளுவன் வழி நடப்போம்
அன்னை தந்தை உலகம்
என்று
ஆதி வணக்கம் சொன்னாரு
ஒழுக்கம் கல்வி அன்பு
பண்பு
அறம் மேன்மை என்று
ஒரு நூறு குறள்
சொன்னாரு
அறம் பொருள் இன்பம்
என்று
முப்பாலாய் வகுத்தாரு.
நூற்றி முப்பத்து மூன்று அதிகாரத்தில்
ஆயிரத்து முன்னூற்று
முப்பத்திமூன்று குறள் தந்தார்.
அரசனுக்கும்
அமைச்சனுக்கும்
அரசாங்கத்துக்கும் குறள்
வகுத்தார்.
தனி மனித
ஒழுக்கத்துக்கும்
விழுப்பம் தரும் குறள் வைத்தார்.
நிர்வாக மேலாண்மைக்கும்
இயற்கைச்
சீராண்மைக்கும்
நல்லாட்சி அமைத்திடவும்
வல்லமையுடன்
திகழ்ந்திடவும்
குறள் சமைத்தார்
வள்ளுவர்.
இல்வாழ்க்கை மட்டுமல்ல
தவம் தானம் என்று கூட
குறள் இயற்றிச்
சென்றார்
வாழ்க்கை நெறியைச் சீரமைக்க
வள்ளுவ நெறியைத்
தந்தார்
வழிகாட்டும் குறள் தந்த
அய்யன்
வள்ளுவன் வழி நடப்போம்
உலகே புகழும்
நெறியிதுவாம்
வள்ளுவப்பெருந்தகையை
வணங்கி நிற்போம்