எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 29 செப்டம்பர், 2022

சுத்தம்

தட்டவரும் கழி தாண்டி
உயிரைக் கையில் பிடித்து
எட்டுக் கால் பாய்ச்சலாய்த் 
தப்பி ஓடிக் கொண்டிருக்கிறேன்.
திரும்பிப் பார்த்தால்
ஒட்டுமொத்தமாய் என் வீட்டை
ஒழித்தழித்துவிட்டு
ஒட்டடை அடித்தேன் 
சுத்தமாகிவிட்டது வீடு எனப்
பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்
பிறர் வாழப் பொறுக்காதவர்கள்.
 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...