எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

என் சின்ன வானமே.



என் சின்ன வானமே !

ஓ! நீலவானமே !
உன் நிர்மால்யத்தில்
நான் நிறைந்து போகிறேன்.
உன்னின் இத்தனை
வெள்ளைப்பூக்களா ?
உன்னுள் எத்தனை வேறுபாடு ?
வெளிர், அடர் நிறப்பிரிகை
இருந்தும் நீ ஒருமையானவள்
நீ வானத்திலும் வையத்திலும்
ஒரே நீலம், விஷ நீலம். அமிர்த நீலம்
நெஞ்சை அப்பிக் கொள்ளும் கருநீலம்
கனவுகளைப் பூக்கவைக்கும் வெளிர்நீலம்.
சங்குப்பூ நீலம் வெளிர்நீலப் புஷ்பம்நீ.
ஒட்டுமாங்கனி வண்ணமாய்
புதுச்சுவையாய் நீலங்களைப் பிரசவிக்கும்
அற்புதப் பிரம்மா. !
நீ பூத்திருப்பது அந்தர வெளியிலா ?
கொடியில்லாமல் வேரில்லாமல் பூக்க
எங்கு கற்றுக் கொண்டாய் ?
ஓ ! நீலவானமே. !
உன் நிர்மால்யத்தில்
நானும் நிறைந்து போகிறேன்.

-- 85 aam varuda diary

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...