எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 டிசம்பர், 2015

சில மாறுதல்கள் அவசியம் தேவையோ ?



சில மாறுதல்கள் அவசியம் தேவையோ ?

இந்த அதீத சிந்தனைகள் எனக்கு ஏனிப்படி ? ( அவை என்னவென்று எனக்கே புரியல ) ஒரு சாதாரண வாழ்க்கை வாழவேண்டும். எல்லாவற்றைப் பற்றியும் கவலைப்பட்டுகொண்டு, சாதாரணமாய்.

எப்போதும் என்னுள் ஏனிப்படித் துடித்துக் கொண்டிருக்கின்றது. எதுவோ ஒன்று. அது ஆன்மத் துடிப்பா ? விளங்கவில்லையே. இந்த வயதில் ஆன்மத் துடிப்பு வருமா ? சாத்யமா ? எதிலும் ஒரு நிறைவு இல்லை. வாழ்ந்தது போதும் என்ற எண்ணம் இல்லை. நிறையிலும் குறையிருப்பதுபோல் எல்லாம் நிறைந்து நான் அதற்குத் தகுதியில்லை என்பது போலொரு எண்ணம்.

வாய்மட்டும் வறட்டுத்தனமாய், அசட்டுத்தனமாய் சொற்களையும், புன்னகைக் குவியல்களையும் நிறைத்துக் கொண்டிருக்க, மனசு மட்டும் குரங்காய் எட்டாத மரக்கிளையை எட்டிப் பிடிக்கத் தாவிக் கொண்டிருக்க, கிடைத்ததை எல்லாம் நழுவவிட்டு ஏதோ ஒரு தனிமைக்காக மன சூன்யத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து அனுபவிக்க ஆசைப்படுகின்றது

-- 85 ஆம் வுடைரி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...