எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 நவம்பர், 2011

மலை அரசியின் எழில்..

மலை அரசியின் எழில்
*********************************
பச்சை வர்ணம் போர்த்த தோகை
பாதி சேலை அணிந்த பூவை..
இச்சை வர்ணம் பூசும் பாவை
இமை வருடும் குளிர்ந்த சோலை

ஊசி மரங்கள் மேகத்துணியில்
ஊசிநூலால் கோர்த்த நெசவு...
குறிஞ்சி மலரும் கொய்யாக்கனியும்
குறைவில்லாத கோர்வைக் கசவு..

மலைப்பிலாத..மலைப்பலா.,
உவப்பிலாத களைப்பிலா.
மலை மக்கள் உழைப்பிலா
மனிதநேயம் செழிப்பிலா..

மனிதருக்காய் மலைகுடைந்து
பாதை செதுக்கி., மலை வனைந்து.,
மலை பிளந்து., மலை விழுங்கி,
ராட்சசநாவாய் நீளும் சாலை..


வெட்டி வீசி வீழ்ந்து கிடக்கும்
பச்சை ரத்த மரச் சடலங்கள்..
பச்சையம் உண்ணும் கட்டிடங்கள்
பேய்க்காளான்களாய் முளைத்து..

அணுமின் ஆராய்ச்சிக்குமாய்
உளுத்துக் கொண்டிருக்கும்
உயிர்கருக்கி உருக்கிவிட்டால்.
உருவாக்க முடியுமா இன்னொரு மலை..

நாகரீகத் தொட்டில்கள்
நனைந்து நிற்கும் நெடுநல்வாடைகள்
நாகரீகம் தோய்ந்த மனிதன்
நாசமாக்கும் பாவை விளக்குகள்

கொடிமுந்திரி.,கொளிஞ்சிக்காய்
யானை., காட்டெருமை, வரையாடு.,
பைன்., தேக்கு., எல்லாம் தொத்தித்
தொங்கும் ஆரண்யக் குளிர்..

சோதனை எல்லாம் இங்கெதற்கு
தாய் இவள்.. உடைக்கிறோம்..
அழிக்கிறோம் ..மழைக்கான தடுப்பணையை
மானுட இனத்துக்கு துரோகமாய்..

தேவதையை தெய்வத்தை
வானவளை வனப்பேச்சியை
அவளை அவளாய் வாழவிடுங்கள்
மழையும் மலையும் நமை உய்விக்க..

3 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

//தேவதையை தெய்வத்தை
வானவளை வனப்பேச்சியை
அவளை அவளாய் வாழவிடுங்கள்
மழையும் மலையும் நமை உய்விக்க..//

arumai...arumai...sariyaana neraththil sariyaana kavithai...vaalththukkal

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சரவணன்.:)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...