எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 17 நவம்பர், 2020

இழுவை

இழுவை
இறைத்திறைத்து ஊற்றியும்
நிரம்பிக் கொண்டிருக்கிறது கிணறு.
திணறித் திணறித்
தத்தளித்து மூழ்குகிறது வாளி
முக்குளித்து மேலேறுகிறது
கயிறில் தொற்றி.
சகடையையும் கிணற்றையும்
இணைத்திழுத்து இணைத்திழுத்துக்
களைத்து கிடக்கிறது இழுவை.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...