எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 12 நவம்பர், 2020

தூரத்துப் பச்சைகள்

வளைந்து நெளிந்து செல்கிறது சாலை
வாய்க்காலின் நெளிவு சுளிவுகளைக் கற்று.
கால் நனைத்துக் கொண்டிருக்கின்றன வீடுகள்,
விலகி இருக்கக் கற்கின்றன தோப்புகள்.
எல்லாவற்றிலும் பாய்ந்து கைநரம்பாய் வெடித்துப் பின்
காணாமல் போகிறது ஒரு பச்சைப் பாம்பு. 
மலைகள் காற்றோடு சூரியனையும்
தாலாட்டிக் கொண்டிருக்கின்றன.
வாய்க்காலின் அன்பில் மூழ்கிக் கிடக்கிறது வயல்.
பொன்வண்ண வெய்யிலில்
வயலெங்கும் பாவி மீன் பிடித்துண்கிறது கொக்கு
தலையசைத்துக் களித்துக் கொண்டிருக்கின்றன
தூரத்துப் பச்சைகள்.
 
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...