எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 10 நவம்பர், 2020

கூந்தல் நாகம்

தழைந்து கிடக்கிறது தாழை
கூடவே இழைந்து கிடக்கின்றன 
கரு நாகங்களும்
மூலக்கூறு இணைப்புப்போன்ற
நாகசடைப் பின்னல்களில் 
மடிப்பு மடிப்பாய்
மணம் வீசிக் கொண்டிருக்கின்றன 
வெட்டுப்பட்ட மடல்கள்.
தாழைக்குள் கிடக்கும் கருநாகமாய்
ஒளிந்து கிடக்கிறது அசையாமல்
வளைந்து நெளியும் கூந்தலும்

  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...