எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 16 நவம்பர், 2020

எஞ்சுதல்

உடல் ஒரு தாவரம்
மூளைதான் கிளைகள்
சிந்தனை இலைகள் விரிகின்றன
பசுமையாய்...
சில பழுப்பேறி உதிர்கின்றன.
எப்போதோ நாசியேறி
சில ரோஜாக்களும் மல்லிகைகளும்
முல்லைகளும் முகிழ்க்கின்றன.
பூவேறிப் பிஞ்சேறிக் 
காயேறிக் கனியுதிர்ந்து
முதிர்ந்து மேலுரிக்கும்போது
எஞ்சுகின்றதொரு மரக்கொம்பு.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...