எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 7 செப்டம்பர், 2020

உறைவு

புகைப்படத்தில் நாங்கள்
கண்ட அளவிலேயே
உறைந்திருக்கிறது
அந்த நகரமும்.
அதன் பூங்காவும் பூக்களும்
இராட்டினமும் கூட
வாளேந்திய மங்கைகள்
கண்சிமிட்டாமல்
நோக்கியபடியே இருக்கிறார்கள்.
நதியும் படகுகளும்கூட
எங்களுக்காகக் காத்து நிற்கின்றன.
எங்கெங்கிருந்தோ கீறிப் பாயும் 
வெளிச்சமும் கூட
இன்னும் பிரகாசமிழக்கவில்லை.
ஒரு கால் உடைந்த நாற்காலி
அப்படியே நின்றிருக்கிறது.
கண்ணில் காக்கைக் கோடுகளும்
காதோர நரைகளும்
பூக்கத்தொடங்கி இருக்கும்
இந்த இலையுதிர் காலத்தில் 
எங்கள் இளம்பருவமும்
அப்புகைப்படத்தில்
உலைவுறாமல்
உறைந்திருப்பதுதான்
உச்சபட்ச மகிழ்ச்சி.
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...