எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 10 செப்டம்பர், 2020

ஒரே உலகம்.

எங்கள் உலகத்தில்
நாங்கள் நால்வர் மட்டுமே
நான் அவர்
இரண்டு சேட்டைக்காரப் பயல்கள்
பின்னொருநாள் மாறியது
மொணமொணத்துக் கொண்டிருந்த
நாங்கள் மட்டுமே
எங்கள் உலகத்தில்.
சேட்டைக்காரன்களுக்கென்று
ஒரு தனி உலகம்.
பின்னும் ஒருநாள்
சேட்டைக்காரன்கள் 
தம் பிள்ளைகளோடும்
பார்யாளோடும் அவர்கள் உலகத்தில் 
குடிபுகுந்தார்கள்.
இப்போது
எங்கள் பெற்றோரின் உலகம்
எங்களின் உலகம்
பிள்ளைகளின் உலகம்
பேரப் பிள்ளைகளின் உலகம்
என்று வேறு வேறாய்க்
குட்டி போட்டது ஒரே உலகம்.

  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...