எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

வளையம்

ஏதோ ஒரு பூவின் வாசம்
நிழல் உருவங்கள்
காதுள் கேட்கும் குரல்கள்
கிணற்றுள் மூழ்கும் குடமாய்
நீர் வளைய நினைவுகள்
அடுக்குகளால் ஆனதா உலகம்
அலைந்து அளைந்தும்
நீளும் கைகளைப் பிடிக்கவே முடிவதில்லை
ரீங்காரம் இடுகிறது நீர்
இறங்கிக் கொண்டே இருக்கிறது கயிறு
தட்டுப்படுவதில்லை
தரையும் ஆகாயமும்
தண்ணென்ற குளிர்வில்
பாசம் தின்னும் தலைப்பிரட்டையாய்
நீந்தத் தொடங்குகிறேன். 


  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...