எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 அக்டோபர், 2013

காடு வெட்டிப் போட்டு.

முந்திரிக்காடுவெட்டிப் போட்டு
வீடு கட்டினோம்.
கரம்பைக் கல் உடைத்து
மாளிகை அமைத்தோம்.

பர்மாவிலிருந்து தேக்கு
ஆத்தங்குடிக் கல்
பித்தளைத் தாழ்வாரம்
பெல்ஜியம் கண்ணாடிகள்
ரவிவர்மா ஓவியங்கள்.

மலேயாச் சாமான்கள்
வெள்ளி சுமந்த பெட்டகங்கள்
பட்டாலையிலிருந்து இரண்டாங்கட்டுவரை
ரத்தினக் கம்பளங்கள்

சிறு பிள்ளையில்
வளவைச் சுற்றிக்
கீழ்வாசலில் இறங்கிக்
கல்லா மண்ணா விளையாடி இருக்கிறோம்.

ஒரு நாள் செட்டிநாட்டுக் கோட்டைகளும்
கல்லாய் மண்ணாய் மூடிக் கிடக்குமென்றோ
ப்ளாட்டுவீடுகளாய் ஆகுமென்றோ
கிஞ்சித்தும் கவலையில்லாமல்.

செவ்வாய், 29 அக்டோபர், 2013

போர்

ஏதோ ஒன்றிடம் இருந்து
எதையோ மீட்கப்
போராடிக் கொண்டிருக்கிறோம்.
சமயத்தில்
நம்மிடமிருந்து நம்மையே.

திங்கள், 28 அக்டோபர், 2013

முகச் சொட்டு

ஞாபகங்களில் இருந்து
சொட்டுச் சொட்டாய்
இறங்குகிறது உன் முகம்.
கலங்கிக் கலங்கிச் செல்லும்
சேற்றின் வண்ணங்களின்பின்
முகம் தீட்டி அலைகிறது மனம்.

வெள்ளி, 25 அக்டோபர், 2013

தந்திக்காலம்



மோனத்தில் உறைந்து

மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறது வீணை

தந்திக்கால ஞாபகங்களை.

வியாழன், 24 அக்டோபர், 2013

தீந்தேன்..

தேன் முத்தம் கொடு என்றால்
தீ முத்தம் கொடுக்கிறாள்.
தேன் தீ..
தீந்தேன்...
Related Posts Plugin for WordPress, Blogger...