ஒரு கருமேகம்
கொதித்துக் கிடக்கும் பூமியில்
நிரப்பிச் செல்லும் குளுமை
பூக்களைச் சிரிக்கவைத்துக்
காற்றைச் சிலிர்க்க வைக்கிறது,
முகம் கழுவி எழும் சூரியனையும்
சுறுசுறுப்பாக்குகிறது.
அலையும் பகல் மரக்கூந்தல்களில்
தங்கித் துயில்கிறது.
ஏகாந்தமாய்க் குயிலோடு
கூதலாய்க் கூவிச் செல்கிறது காற்று.
செய்வதற்கொன்றுமில்லை.,
தினம் தினம் அடுக்கினாலும்
விளையாட்டுப் பொருளாய்
இறைந்து கிடக்கும் இவற்றில்
மூழ்கிக் கிடப்பதைத் தவிர..
கொதித்துக் கிடக்கும் பூமியில்
நிரப்பிச் செல்லும் குளுமை
பூக்களைச் சிரிக்கவைத்துக்
காற்றைச் சிலிர்க்க வைக்கிறது,
முகம் கழுவி எழும் சூரியனையும்
சுறுசுறுப்பாக்குகிறது.
அலையும் பகல் மரக்கூந்தல்களில்
தங்கித் துயில்கிறது.
ஏகாந்தமாய்க் குயிலோடு
கூதலாய்க் கூவிச் செல்கிறது காற்று.
செய்வதற்கொன்றுமில்லை.,
தினம் தினம் அடுக்கினாலும்
விளையாட்டுப் பொருளாய்
இறைந்து கிடக்கும் இவற்றில்
மூழ்கிக் கிடப்பதைத் தவிர..