எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மழை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

மழை.

தண்ணீருக்குப் பஞ்சமாம் இங்கே
கண்ணீருக்கல்ல
மனவடிச் சுரங்கங்களில்
அன்புத் தங்கத்தைச்
சுரண்டிச் சுரண்டி
இப்போது மிஞ்சியது
விரக்தி மட்டுமே
ஆமையாய்
எண்ண ஓட்டுக்குள் சுருங்கி
ஒடுங்கி, சுகமறுத்து
இப்போது சுரணையற்றுவிட்டது மனது;
 இதற்குத் தேவை
ஆறுதல் பேச்சுக்களல்ல
 நரகாசுரன் கூட
அறத்திற்குப் பயந்து
அடிபணிந்துவிட்டான்
இந்தக் கலியுக
நரகாசுரர்களை ஒழிக்க
ஆரம்பித்தால்
வருடம்தோறும் தீபாவளிதான்.

இந்தப் பெண்கள் எப்போதும்
வானத்தைப் பார்த்து
வாடும் பயிர்கள்தானோ
யார் கண்டது
நாளையே மழை வராதா
பயிர் செழிக்காதா
என்ற நப்பாசைதான்
எம்மைப் போன்ற சிலரின்
கவியாசையைப் பூர்த்திக்கின்றது.

-- ஜன 84 சிப்பியில் வெளிவந்தது. 

Related Posts Plugin for WordPress, Blogger...