தூரத்துத் தென்னைகள்
செல்லமாய் முகம் சிணுங்கும்
ஜன்னலின் இடைவழியாய்
வெய்யில் கிளைகளுக்கு
மஞ்சள் க்ரீம் பூசும்
கிணற்றோரம் கால்புதைத்து
மாடிச்சுவரில் முகம் பதிக்கும்.
மனசுக்குக் கவசமணிந்து
இனிப்பைச் சுமந்து நிற்கும்
மழைவரும்போது
சிறுவனாய் உள்ளங்கையில்
நீர்பிடித்துச் சுவற்றில்
முகத்தில் அடித்து விளையாடும்
திசைமாற விரும்பாமல்
நாணலாய் வளையாது
காற்றில் சுயமாய் நிற்கும்.
என்னவோ வெட்டி முறித்தாற்போல்
அடிக்கடி நெட்டி முறிக்கும்
நகரும் மேகங்களை
பக்கத்துச் செடிகளில் சொரியும்பூக்களை
ஜிகினா நட்சத்திரங்களை
மழைத்துளிகளை எண்ணிக்கொண்டு
ஜாலியாய்ப் பொழுது போக்கும்
ஹூம்
கொடுத்து வைத்தவை.-- 85 ஆம் வருட டைரி.