ஒரு நாளிதழ் வாங்க வேண்டும் என்றாள்.
இன்றைய நாளிதழா?
இதுதான் பெயரா
என்று கடையிலிருந்து புரட்டியவன்
அப்படி ஏதும் வந்ததாகத் தெரியவில்லையே என்றான்.
ஒன்பது ரூபாய்க்கு ஓராயிரம் கேள்வி.
வீடு வந்து சேர்ந்த நாளிதழைப்
புரட்டிப் பார்த்து இதுதான், இதேதான்
அரைப்பக்கம் வந்திருக்கே என்று
சொல்ல நினைத்தவள் மௌனித்தாள்
மனைவி எழுதிய புத்தகம் பேர் தெரிந்தால்தானே
இது அதன் விமர்சனம் என்று தெரியும்
அவரவர் உலகில் அவரவர்.
வீடு சேர்தல்தான் முக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))