நிறுத்து
வெளியேறு என்கிறார்கள்
வார்த்தைகளுக்குள்
சிக்கிக் கொண்டிருக்கிறேன்
மௌனத்தின் சுவர்
அச்சுறுத்துகிறது
பேச்சிழந்தபோதெல்லாம் துயில்கிறேன்
எழுந்ததும் வார்த்தைகளும்
என்னுடன் விழித்துப்
போட்டி போடுகின்றன.
இருவரும் போராடுகிறோம்
ஒருவரை ஒருவர் விட்டுவிட.
சகித்துக் கொண்டு
வாழவும் பழகிவிட்டோம்.
மீளாத்துயில்வரை
என்னையும்
வார்த்தைகளையும்
நீங்களும் இயல்பாய்
எடுத்துக் கொள்ளுங்களேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))