எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சமர்ப்பணம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமர்ப்பணம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

ப்ரியமானவர்களுக்குச் சமர்ப்பணங்கள்..

எண்ணங்களைப்
பார்வையாலே கிரஹித்து
உழைத்து உயரவைத்த
அப்பாவுக்கு.,
ஆயகலைகள்
அறுபத்து நாலல்ல
அதற்கு மேலும்
என்று கூறிக் கற்பித்த
அம்மாவுக்கு..,
அன்பு செயல் வழியாகத்தான்
செயல்படும் என்றுணர்த்திய
நளினிக்கு.,
நாமிருக்கும் தூரங்கள்
அதிகமானாலும் பாலங்கள்
போடலாம் என்று கூறிய
சந்திரோதயத்துக்கு.,
அழகும் சிரிப்பும்
அன்பான பழக்கங்கள்
என்ற சிராஜுன்னிசாவுக்கு.,
கலகப்பும் சிரிப்பும்
ஆக்கிரமிப்புமாக
அனைவரையும் அடிமைப்படுத்த
முடியுமென்ற ராஜேஸ்வரிக்கு.,
மோனோ ஆக்டிங் நன்றாக செய்து
அப்ளாஸ் அப்ளாஸாக வாங்கி
மனதைத் தொட்டுப் போன
வசந்தி அக்காவுக்கு.,
கருங்கூந்தலுடன்
அலையலையாச் சிரித்து
இழுக்கும் சாந்திக்கு.,
கனவு காண்பது
என் தொழில் என்று
மனமயக்கத்தில் ஆழ்ந்து
கவிதை சொன்ன வசந்திக்கு.,
மான் விழியால் பேசி
பாடம் படிப்பதே நம் கடமை
என்றுணர்த்திய அமுதாவுக்கு.,
மௌனமாய்ப் பார்த்து
மௌனமாய்ப் பேசி
மௌனமாய்ப் புன்னகைத்து
மௌனமாய் உறவாடும் ஷாந்திக்கு.,
என்நேரமும் எப்போதும்
பங்சுவாலிட்டியையும்
கண்டிப்பையும் கடைபிடிக்கும்
ப்ரொஃபசர் ராஜலெக்ஷ்மிக்கும்.,
“கனவில் மூழ்குவதல்ல..
காட்சியைப் பார்ப்பதே உன் வேலை”
என்று தண்ணீர் தெளித்து எழுப்பிய
சுசீலாம்மாவுக்கு.,
பட்டியல் போட்டுக்
காரியங்கள் செய்யக் கற்றுக்
கொடுத்த சகு மாமிக்கு.,
வீட்டைச் சுத்தமாய்
வைத்துக்கொள்ள
முன்மாதிரியாய்
இருந்த சரஸ் மாமிக்கு.,
பார்த்தவுடன் ஓடிவந்து
கைபிடித்து ஸ்பரிசித்து
மகிழும் முத்து ஆச்சிக்கு.,
பார்வையாலே
பாசத்தை உமிழ்ந்து
தலையைக் கோதும்
ஐயாவுக்கு.,
போதும் போதுமென
பாதிச் சாப்பாட்டிலேயே
எழுந்து ஓடுமளவு திணிக்கும்
லெட்சுமி அம்மாவுக்கு.,
பெண்ணைப் பூவைப்போலப்
பார்க்கக் கற்றுக் கொடு்த்த
பாலுவுக்கு.,
உலகை ஆராய்ச்சி நோக்கோடு
அணுகக் கற்றுத்தந்த
ஜெ.காவுக்கு.,
உன்னை நேசிப்பவரை எல்லாம்
உன்னாலும் நேசிக்க முடியும்
என்பதைக் கூறிய ஜே.கே.வுக்கு.,
கிழக்குப் பார்த்து அமர்ந்து
இந்த உலகம் இலட்சியமில்லை
உனக்கு.. உதறிவிடு என
வேதாந்தம் உரைத்த
ஆனந்த விநாயகருக்கு.,
கோப உணர்வுகளைக்
கட்டுப்படுத்தக்
கற்றுத்தந்த மீனாவுக்கு.,
எல்லார் குற்றத்தையும்
தன் குற்றமாகப் பாவிக்கும்
கீதாவுக்கு.,
பழகுவதற்கு இனிய
கேதரின்., கல்யாணி., கலாவுக்கு.,
என்ன மாதிரிப் பழகுவாள் என
என்னால் இனம் கண்டு
பிடிக்கமுடியாத வித்யாவுக்கு.,
இவ்வளவும் எழுத எனக்கு
உதவிய என் ஆதிபகவனுக்கு.,

”சமர்ப்பணங்கள்..!!!”
Related Posts Plugin for WordPress, Blogger...