எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அந்தப் பூக்கள் வாடிக்கொண்டிருக்கின்றன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அந்தப் பூக்கள் வாடிக்கொண்டிருக்கின்றன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 ஜூன், 2015

அந்தப் பூக்கள் வாடிக்கொண்டிருக்கின்றன. :-



அந்தப் பூக்கள் வாடிக்கொண்டிருக்கின்றன. :-

ஆதாரமில்லாமல்
அந்தரத்தில் தொங்கும்
அந்தப் பூக்கள் வாடிக்கொண்டிருக்கின்றன

காம்புக் கால்களால் நின்றுகொண்டு
கதிர்களிடம் யாசிக்கின்றன
திரும்பத் திரும்ப மேல்வந்துவிழும்
அக்கினிக் கேள்விகளுக்குப்
பதில் தெரியாத அசட்டுமாணவனாய்
அவமானப்பட்டுச் சுருங்குகின்றன.

கரங்களின் தொடுதல்களுக்குக்
காத்திருந்த அவைகளுக்குக்
காற்றின் முத்தங்கள்கூடக்
கிடைக்கவில்லை.

மெல்லிய பூக்கள்
வரதட்சணையில்லாப் பெண்ணாய்
வெய்யில் ஏற ஏற வதங்கிக்
கிழவியாகின்றார்கள்.

காம்பறுக்கப்பட்ட அந்தப் பூக்கள்
தெய்வங்களுக்கு மட்டுமல்ல
பிணங்களுக்குக்கூடப் போடப்படவில்லை.

யாருமறியாமலே புஷ்பவதியான அவை
தன் மரிப்புக்குக் காலையிலேயே
கண்ணீர் வடித்து விடுகின்றன.

காய்ந்த பூக்கள் கடைசியாய்க்
கருணையுடன் அனுமதிக்கப்படுகின்றன
மண்ணை முத்தமிடுவதற்கு.

இந்தப் பூக்களுக்கு வேருமில்லை
கிளையுமில்லை.
மகரந்தப் பையையும்
மணத்தையும்தவிர.

விதையைப் பொதித்திருக்கும்
அந்தப் பூக்கள் விதைக்க
நிலமில்லாமல் மௌனித்திருக்கின்றன.

தங்கள் சுகந்த ஞாபகங்களை
காற்றுக்குத் தானமாய்க்
கொடுத்துவிட்டு மண்ணில்விழும்
அந்தப் பூக்கள் தங்களுக்குத் தாங்களே
மண்சமாதி கட்டிக்கொள்ளும்.

-- 85 aam varuda diary. 

Related Posts Plugin for WordPress, Blogger...