எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 1 டிசம்பர், 2017

சீய்த்தல்.

இரையில்லாத மண்ணைக்
கொத்தும் கோழியாய்
தனிமை என்னைச்
சீய்த்துப் போடும்.

அவ்வப்போது
தன் அலகால்
ஆழம் பார்க்கும்.
ஞாபகப் பிரதேசத்தின்
ஏதோ ஒரு புழுவை
அரைகுறையாய்ப் பிடுங்கி
ஆராய்ந்து மெல்ல உண்ணும்.

நினைவுகளோ
மண்புழுக்களாய்
நெளிந்து நீளும்,
ஞாபக மண்ணில்,

கோழி
பாலைவனத்தையும்
சோலை வனத்தையும்
கிளறி உண்டு ஓயும்..

மனசுள்ளும்
வெளியேயும் எப்போதும்
இரண்டு கோழிகள் எனக்காய்..
என்னைக் கூறு போட்டுக் கொண்டு..


-- 82 ஆம் வருட டைரி. :)

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...