எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 நவம்பர், 2017

நானுமோர் துறவி.

நானொரு துறவி
பூர்வாசிரமத்தை
விட்டு வந்த துறவி.

தவம் என்னும்
கடமைக்காக
மலையேறிக்
கஷாயம் உடுத்தி
முடிவளர்த்துக் குவித்து
ஜபமாலை உருட்டி
நீரர்ப்பணம் செய்து
ஜபமாலை உருட்டி
நீரர்ப்பணம் செய்து
நானுமோர் துறவி.

கனிகாயால் கிளைத்தெழுந்து
கோபமழிந்து
சாந்தம் புகுந்து
இறைமையை அர்ச்சித்து,
தூரதர்சித்து,
நானுமோர் துறவி.

கொட்டையணியாமல்
கட்டை மாட்டாமல்
ஓடு ஏந்தாமல்
நீறு தீட்டாமல்
நானுமோர் துறவி.


-- 82 ஆம் வருட டைரி. :)

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...