எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 29 நவம்பர், 2017

நினைவுப் பை.

மடங்கிக் கிடக்கிறது
ஞாபகம்,
உன் மனசாய்
எனக்குள்.

க்ளிப்பின்
கரங்களுக்குள்
துணிகளாய்
நினைவுப் பையும்
காற்றாடும்.

படுக்கை விரிப்புகள்
நுனி மடங்காமல்,
வெறுக்கத்தக்க
அழகுடன்.

விட்டத்துப் போர்வைகள்
விட்டிலாய்
என்மேல் சரிய
விளக்காய் நான்.

அனைவரின்
பேச்சுக்களும்
தென்னை மட்டைச்
சரசரப்பாய்
ஒன்றும் செய்யாது
போகும்..,
என்னை.


-- 82 ஆம் வருட டைரி. :)

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...