எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 4 டிசம்பர், 2017

காய்ப்பு.

கிடக்கட்டும்
அந்த வயல்கள்.
எப்போதும் சாகுபடி செய்து
என்ன பெற்றோம் ?

ஏ! சின்னச் செடியே
இந்தச்
சித்திரைக்கா
சுருள்வது?
சோம்பாதே.
சிரித்து நில்.
சுபிட்சம் வரும்.

நீ
சீகைக்காய்களாய்க்
காய்த்துப் போ.
நீ
காய்த்துப் போனால்
பலன் உண்டு என்றால்
காய்வதற்கு ஏன் வருத்தம் ?

உன்
மனத்தைக்
காய்க்கச் செய்து
தூகைகளையும் நேசி.
தூகைகளும் தழையலாம்.


-- 14 . 3. 88.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...