எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

புள்ளினம்.

மருளடைந்து இருள்மரத்துள்
ஒடுங்கிக்கிடக்கிறது ஒரு பறவை.
தண்ணிலவில் சுருள்கிறது காற்று.
நனைந்து கிடக்கின்றன மலர்கள்.
மருப்பொசிக்கும் மாதவனும்
மையலுற்றே முயங்குகிறான்.
விருப்புற்றுக் கேட்பதற்கு
வெண்சங்கும் பக்கமில்லை.
நிம்பர்கரின் பேதா அபேதம்
குழல் ஒலிக்கக் காத்திருக்கும்
புள்ளினம் மட்டும் கீசு கீசென்று
தனக்கு மட்டுமாய்த் தன்னகத்துள். 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...