எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

கண்மை டப்பி



கண்மை டப்பி.

பக்கத்துவீட்டுப் பெரியநாயகி
பட்டணம் போயி பொகையிலைவித்து
வித்த துட்டுக்கு வாங்கிவந்தாளாம்
கண்மை டப்பி.
தெனம்தெனம் அப்பிக்கினு
கடைத்தெருவுக்குப் போகையில
கண்டவுக எல்லாம் கண்ணழகு
கண்ணழகுங்க கரைஞ்சுவந்த
காத்துல விஷயம் நாத்துநட்ட
சின்னக்கருப்பாயி காதுக்குப் போனுச்சாம்.
கருப்பாயி கடைஞ்செடுத்தா கண்ணப்பனை.
அவன் எங்க போவான் துட்டுக்கு.
கஞ்சிக்கே வக்கில்லை.
கஞ்சக் கண்ணப்பன் கொஞ்சினான்.
“ அடி என் கறுப்பழகி.!
உன் நிறத்துக்கு மை ஈடாகுமான்னு .! “
உடனே பூரிச்சாளாம் சின்னக்கறுப்பாயி
அய்ய நான் இம்புட்டு நெறமான்னு.

---  85 ஆம் வருட டைரி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...