எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

மெல்லத் தமிழ் இனி..



மெல்லத் தமிழ் இனி.. :-

முத்தமிழும் முக்கலையும்
மூவேந்தர் காத்தநாடு
சங்கம் அமைத்துத்
தங்கத்தமிழ் வளர்த்த நாடு.
முக்கனியைப் பிழிந்துதரும்
தக்க மதுரையே ஈடு. !
பாத்திமா அன்னைபோல்
( ஃபாத்திமா விருட்சத்தில்
தமிழ்க்குயில்கள்
எந்நேரமும் இசைபாடும்.)
மற்ற கல்லூரி அன்னைகளும்
முத்தமிழ் விழாவைத்துத் தம்
தமிழ்க்குழவியைச் சீராட்ட
ஆரம்பித்தால் தமிழ் வளரும்.
அதுவரையில் பொறுக்க வேண்டும்.
பாரதியின் வாக்குப் பொய்யாகட்டும். !

மெல்லத் தமிழ் இனி –2

காணும் இடங்கள் தோறும்
முத்தமிழ் வித்தகர் கூட்டங்கள்.
மேடை ஏறிப்பேசும்
மேதாவிக் கூட்டங்கள்
மேதகு தன்மையை விட்டுவிட்டுக்
கீழ்த்தர ஜோக்குகள் அடிக்கின்றன.
மையக்கருத்து என்னவென்றே
மறந்துபோய் நிகழ்த்தும் வழக்காடுமன்றம்.
மக்களுக்கென்ன புரியப்போகின்றது
என்கின்ற நினைப்பா?
காதலரையும் கால் அதரையும்
மாதே வா மஞ்சுளாவாவையும் ஆராய்ந்துகொண்டு
இருந்தால் மெல்லத் தமிழ் இனி..?
பாரதியின் வாக்கு பலித்துவிடுமோ ?

-- 85 ஆம் வருட டைரி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...