எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 29 மே, 2013

மனிதர்களைத் தேடி..

பொழுதின் கழுத்து
என் கைகளில்

காற்று
பலூன்களாய்,
நீர்க்குமிழிகளாய்
உருமாற்றம் பெறும்.

வாணச் சத்தங்கள்
மனசுக்குள்.

வடமெனும்
உயிர் இல்லாச்
சவமாய்த் தேர்.

வெய்யில் குல்லாய்க்குள்
தேராய்
மனம்.

தெய்வம்
மனிதர்களைத் தேடி
திருவிழாக் கூட்டத்துள்..

31.12.1986 -- 6.10 PM.. வீட்டு டைரியில் கிறுக்கியது.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனிதர்கள் கிடைப்பது அரிது...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்.. ஆம்..

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...