தீர்க்கமுடியாதவை:-
***************************
தேத்தண்ணியும் காப்பித்தண்ணியும்
கலந்த சீனிப் பானையாய்
பெருத்துக் கிடக்கிறது வயிறு
ஊர்விட்டு ஊர்மாறும்
அட்டைப் பெட்டிகளால்
நிரம்பிக்கிடக்கிறது வீடு.
தண்ணீர்க் குழாய்களாலும்
சாக்கடைப் பள்ளங்களாலும்
பிளந்து கிடக்கிறது சாலை.
சுயநல அணைகளாலும்
அணு ஆலைகளாலும்
பிளவுபட்டுக் கிடக்கிறது ஊர்.