எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 1 நவம்பர், 2012

தீர்க்கமுடியாதவை..

தீர்க்கமுடியாதவை:-
***************************
 
தேத்தண்ணியும் காப்பித்தண்ணியும்
கலந்த சீனிப் பானையாய்
பெருத்துக் கிடக்கிறது வயிறு
 
ஊர்விட்டு ஊர்மாறும்
அட்டைப் பெட்டிகளால்
நிரம்பிக்கிடக்கிறது வீடு.
 
தண்ணீர்க் குழாய்களாலும்
சாக்கடைப் பள்ளங்களாலும்
பிளந்து கிடக்கிறது சாலை.
 
சுயநல அணைகளாலும்
அணு ஆலைகளாலும்
பிளவுபட்டுக் கிடக்கிறது ஊர்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை வரிகள்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...