எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 6 அக்டோபர், 2020

சமரசங்களோடு வாழ்வது.

துளிர்க்கும்போதே ஓணான்களுக்கும்
துளிர்த்தபின் கத்திரிகளுக்கும்
துளிர்க்க ஏங்கி நீருக்கும்
துளிர்க்கரம் பிடித்தெழுப்பும் சூரியனுக்கும்
துளிர்ப்பிடி கருகிச் சருகாகும்போதும்
துளிர்த்த இடத்திலிருந்து ஒட்டறுந்து வீழும்போதும்
நன்றியும் பாசமும் காதலும் கொண்டு
மிதந்தும் பறந்தும் செல்ல வாய்ப்பதுதான்
சமரசங்களோடு வாழ்வது.

  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...