எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 6 பிப்ரவரி, 2019

தேவதை ரூபம்.

பின்னிரவின் கனவில்
ஆவியைப் போல்
அலைகிறது நினைவு.
போர்வையைச் சுருட்டிப்
புதைந்து கொள்கிறது யட்சிணி.
வெளியேறும் வழியின்றி
படுத்துகிறது ஒரு பேய்.
பின்னும் விடியலில்
விழித்தெழுகிறது ஒரு பூதம்.
கண்கசக்கி விழிக்க
கண்ணாடியில் கையசைக்கிறது
ஒரு பிசாசு.
எத்தனையோ பார்த்தவன்
அத்தனையுடனும்
வாழத்துவங்குகிறான் ராட்சசனாய்
வெளிச்சம் விழத்துவங்க
இரண்டும் அவசரமாய்
தேவதைரூபம் தரிக்கின்றன.
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...