எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 1 டிசம்பர், 2016

எல்லைச்சாமி

நீலத்தின் படிமங்கள்

நீர்த்து வெளிராகின்றன.

பசுமை மஞ்சள் ஆரஞ்சு

எல்லைக் கோடுகள்தாண்டி

செஞ்சினம் கொண்டும்

அழிக்கக் கிளம்புவதில்லை எல்லைச்சாமி

கருக்கருவாளும் குதிரையும்

துணைகொண்டு துண்டித்துக் கொண்டிருக்கிறான்

ஊர் எல்லையை இருப்பிடமாய்.

வெய்யிலும் மழையும்

சுதந்திரமாய்த் தழுவும் அவன் நோக்கி

சல் சல் என்று மனம் ஓடுகிறது.

ஆலமும் அரசும் கோலோச்சும்

சாமியவன் காலடியில் வருடம் ஒருமுறைதான்

வாய்க்கிறது பலியாடாய்க் கிடக்க.

ரத்தம் ருசிக்குமவன் சன்னதத்தை

எதிர்நோக்கிக் கிடக்கிறது எந்நேரமும் மனம்.



2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கண் முன்னே எல்லைச்சாமி தெரிகிறார்...!

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...