எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 டிசம்பர், 2016

பறவைக்கூட்டம் காப்போம். :-

பறவைக்கூட்டம் காப்போம். :- ( UNEDITED )


கோடைக்காலம் வருகுது.
கொள்ளை வியர்வை பெருகுது


குடியிருக்க இடமில்லாமல்
பறவைக் கூட்டம் அலையுது.


மொட்டைமாடிக் கதவு நிலையில்
கூடுகட்டி குஞ்சு பொரிக்குது


இறக்கை சிதறிக் கிடக்குது.
இரையில்லாமல் தவிக்குது.


கீச்கீச்சென்று குட்டிக்குரல்
காதை வருடி அழைக்குது.


ரொட்டித் துண்டு போடலாம்
குருணை, தானியம் போடலாம்.


குட்டிக் கிண்ணங்களில் நீரூற்றி
குருகுகள் தாகம் தணிக்கலாம்.


கோடை காலம் தீரும்வரை
கொள்கையொன்று கொள்ளுவோம்


பறவைக் கூட்டம் பசியாற
பரிந்தே உதவிகள் செய்திடுவோம்.


4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல மனம் வாழ்க...

மாதேவி சொன்னது…

சிட்டுகளைகாப்போம்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி :)

ஆம் மாதேவி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...