எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 நவம்பர், 2016

சேதி

வருவதும் போவதும்
போவதும் வருவதும்தான்
என்றானபின் பயணக் கணக்கென்ன.. ?
ஒவ்வொருதரமும்
ஒரு துயிலும் விழிப்புமாய்ச்
செல்கிறது காலம்.
ஒரு வித்யாசம்
உன் பயணப் பொழுதுகளில்
நீ தூங்கிக் களிக்கலாம்.
அதே பொழுதுகளில்
நான் விழித்தே கடக்கிறேன்,
நீ உனக்கான இருப்பிடம்
சென்று அடைந்த சேதி அறிய.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...