எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

இரவின் மடியில்



இரவின் மடியில்

முடிந்துபோன கதைக்கு
இரண்டாவது பாகம் அவசியமில்லை.
இருள் தேவன் சந்நிதிக்கு
இரட்டை விளக்கு தேவையில்லை.
அச்சாணி முறிந்த வண்டிக்கு
இரட்டை மாடு தேவையில்லை.
அஸ்திவாரமில்லா மனக்கோட்டைக்கு
அலங்காரங்கள் அவசியமில்லை.
பாம்பு நாக்கு மனிதனுக்கு
விஷம் வேண்டியதில்லை.
பவுர்ணமி நிலவுக்கு
வெளிச்சம் வேண்டியதில்லை.
மீண்டும்
மீண்டும்..
இருளின் ஆதிக்கத்தில்
தனிமை என்னை
ம் செய்கின்றது.
கண்ணீர் என்னை
முத்தமிடுகின்றது.
கண நேரச் சலனங்கள்
என்னை அள்ளி
அணைக்கின்றன.
முடிவில் பயமென்னைப்
பூரணமாய் ஆட்கொண்டுவிட்டது.
உதய தீபமாய் உன்னை
எதிர்பார்த்து
அஸ்தமன இருளில்
அடிபணிந்தேனே
நானொரு முட்டாள். !
என் கண்கள் இன்றும்
உப்புமலர்களையே உதிர்க்கின்றன.
 -- 80 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...