எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 25 ஏப்ரல், 2015

கடற்கரை சாலை

தடங் தடங் வாய் ஓரம் நுரைப்புகள். இருட்டு ஓட்டம் ஒரே ஓட்டம். பாத நுனிகள் பிடறியில் பட்டது.  திரும்பிப் பார்க்க பயம். கண்ணை இறுக்க மூடிக்கொண்டு ஓட எதிரே எரிந்த விளக்கு இமையில் வெளிச்சம் போட கண்  திறந்தாள்.

கடற்கரைச் சாலை . பதட்டம் தீரவில்லை. ஒட்டகம் போல் கால் புதையப் புதைய வேக நடை.

மச்சான் விளக்கை அணைச்சிரு தொடர்ந்து கலகலவெனச் சிரிப்பலைகள் பக்கத்துக் குடிசையிலிருந்து வெளிப்பட்டதோ இல்லையோ மறுபடியும் பேயடித்தது போல் ஓடினாள். மண்ணை கால்களால் அளந்து கொண்டிருந்த பணக்காரக் கிழக் கால்கள் நிதானித்து பயந்து இவளுக்கு வழிவிட்டன.

அவளுக்கு இருட்டு என்றாலே பயம் . பயம்  மனசு பூரா பயம். மூச்சு இறைத்தது. வானம் தன் நைட் ட்ரஸைக் களைந்து கொண்டிருந்தது. முடிக்கற்றைகள் காற்றில் பறந்து முகத்தில் அறைந்தன.

கருப்பாய் ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்க இவள் அதிர்ந்துபோய் வீறிட்டலறிக்கொண்டு திரும்பவும் வந்த வழியே திரும்பி ஓடி வர காகங்கள் விடியல் இருளிலும் பூவாவுக்குக் கத்திக் கொண்டிருந்தன. பால்பாக்கெட்டுகள் உடைக்கப்பட்டு பாத்திரங்களில் ஊற்றப்பட்டுக் கொண்டிருந்தன.

மெட்ரோ வாட்டர் சப்ளையில் தண்ணீர்ப் பானைகள்  தவங்கிடந்து கொண்டிருந்தன. நாராயணா கஃபேயில் உலகம் இருட்டு. நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு என்று டி எம் எஸ் பாடிக்கொண்டிருந்தார். கறுப்புக் காப்பியின் மணத்தை நுகர்ந்து கொண்டிருந்த சுந்து என்ற சுந்தர விநாயக ஆதித்தன் இவளைக் கண்டதும் கொதித்துக் கொண்டிருந்த காப்பியை வாயில் ஊற்றி நாக்கைச் சுட்டுக் கொண்டு கல்லாக்காரரிடம் ப்ச்சைத் தாளை விசிறி அடித்துவிட்டு  அதே வேகத்தில் கிளிப்பச்சை நிற சுவேகாவை  உதை கொடுத்து ட்ட்ட்ர்ர்ர் ரிட்டுப் புறப்பட்டு வட்டம் போட்டு ட்ட்ட்ட்ட் என்ற வேகத்தில் தெருமுக்கில் திரும்பி அவளைப் பிடித்து சிறிது மூச்சு விட்டு நந்து பின்னால ஏறிக்கோ வீட்டுக்குப் போகலாம் என்று சொல்ல இவள் போடா.. மாட்டேன். என்று திமிறினாள்.

--- 82 ஆம் வருட டைரியிலிருந்து இன்னும் ஒரு பூர்த்தியாகாத கதை.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...