எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 15 ஏப்ரல், 2015

கனவுப் பொங்கல்,



நண்பனே
மலர்கள் மென்மையானவை.
எடுப்பார் கைப்பிள்ளைகள். 

அவைகள் பாஞ்சாலிகளாகப்
பிறக்கவில்லை.
அது நேர்ந்துவிட்டது.

செருப்பின் கீழ்
புல் நசுக்காதே

விடியலின் பனி வெப்பத்தில்
ஜனித்த அது
மாலைக்குள் பொசுங்கிப் போகும்.

வா.. ! 

நாம் மாநாடு போட்டு

கூட்டம் கூட்டமாய்ப் பேசாமல்

நிறைவேறாத் தீர்மானங்கள்
அரங்கேற்றிவிட்டு வராமல்

தாக்கல்கள் ஏற்றுக்கொள்ளப்படாமைக்கு
இரங்கற்கூட்டம் போடாமல்

மலர்களின் மிருதுத்தனத்தைப்
பனி வெப்பத்தை கனவுப் பொங்கலை
இரசிப்போம். !

வா !

ஸ்நேகிதம் சரிப்போம்
ஸ்பரிசிப்போம். !

டிஸ்கி :- 1883 ஆம் வருட டைரி.

2 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...