எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 13 ஏப்ரல், 2015

பியானோ வாசிக்கும் காகங்கள்



மரங்கள் மௌனித்தன
விநாடி முட்கள்
உயிரைக் கிழித்துக்கொண்டு
நகரும். வினாடி முட்கள்.

பிராண்டிப் போகும்
பார்வை நகங்கள்

காற்றைச் சூரியன்
விழுங்கும்.

சூரியனின் சரியலுக்காய்
பியானோ வாசிக்கும்
காகங்கள்

பட்டறைகள் இரும்புடன்
சப்தம் கொப்பளிக்கும்.

கட்டிடங்கள்
காகங்களையும்
எச்சங்களையும் பார்த்து
எரிச்சல்படும்

வெய்யில் மேகத்துடன்
சேர்ந்து எருமைமாடாய்
அசையும்
~ ~ ~ ~ ~

மதிய உணவுக்கான
மணி அடிக்கப்போகிறது.
 
அப்பாடா  மரங்கள்
காற்றுறுஞ்ச மூச்சுவிடப்
போகின்றன.

-- 85 ஆம் வருட டைரி.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...