எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 24 ஜனவரி, 2015

முறைக்கும் பார்வை:-



முறைக்கும் பார்வை:-

லைப்ரரி ஷெல்ஃபில்
தலையை நுழைத்துப்
புத்தகங்களைக் கலைத்துக்
குதறிப் போட்டுக்
குசுகுசுத்துப் பேசிப்
பாலகுமாரனை புத்தகத்தைப்
பவ்யமாய் எடுத்துக்
கக்கத்தில் இடுக்கிக்
கனவேகமாய் வெளிப்படும்போது
பரிட்சையை வைத்துக்கொண்டு
இலக்கியம் என்ன வேண்டிக்கிடக்கு
என்பதாய் முறைக்கும் பார்வை ஒன்று
ப்ரசவிக்கும் பேராசிரியரிடம்.
பாலகுமாரன் கக்கத்தை விட்டிறங்கி
ஷெல்ஃபில் சமத்தாய் அமர்வார்.
மத்யான் வெய்யில்
சுள்ளென்று சுடும் மனதில்.

-- 82 ஆம் வருட டைரி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...