எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

சோறு பொங்கிய தோழி



சின்ன வாளியும்
மண் அள்ளும் கரண்டியும்
வாங்கிக் கொடுத்தேன்
மகள் விளையாட
சிப்பி சங்கு பொறுக்கி
கூடையிலேற்றி மண் அள்ளி
வீடுகட்டியவள் இன்று
வீடுகட்டும் பொறியாளர்.
மாடிப்படியின் கீழ் ஷோகேஸில்
அவள் பொறுக்கிய கிளிஞ்சல்கள்
மாடிப்படி எறி இறங்கும்போது மட்டும்
பார்த்துக் களிக்கின்றன,
பொறுக்கிக் கழுவிச்
சோறுபொங்கி விளையாடிய
தங்கள் தோழியை.


3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை சகோ...

Thenammai Lakshmanan சொன்னது…

கருத்துக்கு நன்றி தனபாலன் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...