எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 8 மார்ச், 2014

சுயத்தோடும் சுயரூபத்தோடும்.

ஒவ்வொரு கணத்திலும்
நேசிக்குமென்னிலிருந்து
வேறொன்றும் விளைகிறது..

ஒரு கணம் விலகி
சுயத்தோடும் சுயரூபத்தோடும்
கோரைப்பல் முளைக்குமென்னை
நோக்கி நீள்கிறது உன் புன்னகை.

பேச்சும் ஏச்சும் புகையாய்ப் பரவ
என்னின் பல பரிமாணங்களையும்
அவ்வப்போது வெளிக் கொணரும்
உன்னையும் உண்ணத் துவங்குவேன்.

மௌனமாய் ஒப்புக் கொடுக்கும்
உன்னை உண்டு கோபத்தீயடங்கி
சாம்பல் பூக்குமென்னை
மழையாயும் விழுந்து குளிர்விப்பாய்.

மண்ணோடு மண்ணாய்க்
கலந்து கிடப்போம்,
மதகுகள் உடைத்த
வெள்ளத்தில் மூழ்கி..

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

// சாம்பல் பூக்குமென்னை
மழையாயும் விழுந்து குளிர்விப்பாய். //

அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...