எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

நொடிப்பூக்கள்.

உதிர்கின்றன நொடிப்பூக்கள்.
ஒவ்வொரு இதழ்களிலும்
குழந்தை, குமரி, தாரம் என
சுருக்கங்கள் படியத் துவங்குகிறது.
தாதியாயிருந்து
தாய்மைக் கோடுகளோடு
அசைந்தாடும் சருகின்கீழ்
புதிதாய்க் காய் கனிய
விழுந்து தவழ்ந்து
உருவாக்கிய மண்ணை
முத்தமிட்டு அணைக்கிறது சருகு.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சொன்னவிதம் ரசனை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...