எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

இறங்குதல்

எந்த இடத்தில் இறங்குவது
இருட்டாயிருக்குமோ
கள்வர் பயமிருக்குமோ
துஷ்டப் பிராணிகள் துரத்துமோ
குலைத்துத் தள்ளும் நாய்கள்
அமாவாசை இருட்டு
சலசலக்கும் பனைகள்
மயானத் தீப்பந்தம்..
யார் யாரோ எந்த பயமுமின்றி
இறங்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
கடந்து போய்க் கொண்டே இருக்கிறேன்,
அரைகுறைத் தூக்கத்தோடு.
பேருந்தில் அமர்ந்து
எங்கே எப்படி இறங்கப் போகிறோம்
என்ற கவலையோடு.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இப்படியா பயமுறுத்துறது... ஹிஹி...

Thenammai Lakshmanan சொன்னது…

பயந்துட்டீங்களா தனபால்.. :) கருத்துக்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...