எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 அக்டோபர், 2012

என்று தீரும் இதெல்லாம்..?

ஆணிகளால்
அறையப்படப்போகும்
கட்டைகளைச் சுமந்தபடி
பயணப்படத் துவங்குகிறான்.
சவுக்கடிகள் சீறுகின்றன
கட்டைகளோடு கட்டையாய்
விழுந்து எழும் அவன்மேல்.
யார்யாருடையதெல்லாமோ
சுமக்கிறான்.
சுமந்து சுமந்து அதிலேயே
மரிக்கிறான்.
சோர்ந்த கண்களும்,
கையறு நிலையும்
உறைந்து கிடக்கும்
இரத்தத்திப்பிகளும்
உயரப்பறக்க முயலும்
பறவையைப் போன்ற
சித்திரத்தோடு
நிறைவேறாமலே
நூற்றாண்டுகளாய்த்
தொடர்கிறது அவனது
ஏக்கமும் பயணமும். 

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தீரும் - அவரவர் மனதைப் பொறுத்து...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஆம். உண்மை தனபால்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...